×

அமைந்தகரை பகுதியில் கத்தி முனையில் மூதாட்டியை மிரட்டி 10 பவுன் கொள்ளை: 5 பேர் கைது

அண்ணாநகர்: அமைந்தக்கரையில் மூதாட்டிய மிரட்டி 10 சவரன் நகைகளை கொள்ளையடித்த ரவுடி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அமைந்தகரை என்எஸ்கே நகரை சேர்ந்தவர் குப்பம்மாள் (64). இவர், தனது வீட்டின் கீழ்தளத்தில் நேற்று முன்தினம் இரவு தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை 3 மணியளவில் முகமூடி அணிந்தபடி 6 பேர், வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த நகைகளை எடுக்க முயன்றனர். சத்தம்கேட்டு எழுந்த குப்பம்மாள் அலறி கூச்சலிட்டார்.  இதனால் ஆத்திரமடைந்த கும்பல், மூதாட்டி கழுத்தில் பட்டாக்கத்தியை வைத்து சத்தம் போட்டால் குத்தி கொன்றுவிடுவோம் என்று மிரட்டி, பீரோவில் இருந்த 10 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு பைக்குகளில் தப்பியது.
இதுகுறித்த புகாரின்பேரில் அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனர். அதில், அமைந்தகரை என்எஸ்கே நகரை சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திக் (27), அவரது கூட்டாளிகளான சரவணன் (27), திவாகர் (20), சக்திவேல் (24), அர்ச்சுனன் (24) ஆகிய 4 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 10 சவரன் நகைகளையும் போலீசார் மீட்டனர்.

மற்றொரு சம்பவம்:
சென்னை சாலிகிராமம் தேவராஜ் நகர் வீரமாமுனிவர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் டேனியல் (52). டிரைவரான இவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கடந்த 14ம் தேதி முதல், தனது குடும்பத்துடன் மாம்பலத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் சுரேஷ் டேனியல் அவரது வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 2 சவசரன் நகை, ₹25  ஆயிரம் மாயமாகி இருந்தது. இதுகுறித்து சுரேஷ் டேனியல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு ெசன்று, வீரமாமுனிவர் தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ெபற்று மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.



Tags : 10 burglary,5 arrested
× RELATED சிறுமியின் காதலை கண்டித்த தாயின்...